நேற்று கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உரைப்பெயர்ப்பாளரை 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய தீர்மானம் !



ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த
நாடாளுமன்ற உரைப்பெயர்ப்பாளரை, 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) குறித்த சந்தேகநபர் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜமால்டின் நௌஷாட் என்ற இந்நபர், 2006ஆம் ஆண்டிலிருந்து உரைப்பெயர்ப்பாளராக நாடாளுமன்றில் கடமையாற்றி வருவதாகவும், அத்துடன் நீண்ட காலத்துக்கு முன்னர் தேசிய​ தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கைத் தலைவரும் இலங்கையில் இடம்பெற்ற தொடர்குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உரைப்பெயர்ப்பாளரை 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய தீர்மானம் ! நேற்று கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உரைப்பெயர்ப்பாளரை 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய தீர்மானம் ! Reviewed by Madawala News on May 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.