14 TNA உறுப்பினர்களில் 8 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு !!



அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ்
தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான உறுப்பினர்கள் கட்சி தலைமைத்துவத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் 8 பேர் அமைச்சர் ரிஷாதுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பட்டில் இருப்பதாக அக்கட்சி உயர்மட்ட உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர அமைச்சருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச அரசியல் வாதிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மன்னார் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உயர் பீடம் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மளநாதன் தலைமையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம் நிறைவேற்றிய அதேவேளை பா உ சித்தார்த்தன் அமைச்சர் ரிஷாத் குறிப்பிட்ட காலத்திற்கு பதவி விலக வேண்டும் என கோரியிருந்தார்.மேலும் தான் அமைச்சரின் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பதாக அவர் கூறியிருந்தார்.
14 TNA உறுப்பினர்களில் 8 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு !! 14 TNA உறுப்பினர்களில் 8 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு !! Reviewed by Madawala News on May 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.