இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக
அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனிடம் உறுதியளித்துள்ளார்.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14) பிற்பகல் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி இலங்கையின் பாதுகாப்புத் துறை நடவடிக்கைகளுக்கு சீனாவிலிருந்து 2600 மில்லியன் ரூபாய் நன்கொடை வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சீனாவிடம் இருந்து 2600 மில்லியன் ரூபாய் நன்கொடை
Reviewed by Madawala News
on
May 14, 2019
Rating: