இன்ஷாப் அஹமட்டுக்காக துஆ பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி உட்பட ஐவர் கைது.

(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத்
தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக துஆ  பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி உட்பட ஐவர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.


இன்று மாலை கொள்ளுபிட்டியில் உள்ள மொஹம்மட் இப்ராஹீம் அன்ஷாப் அஹமட்டின் மனைவின் வீட்டில் வைத்து அவர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்.


கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த மெளலவி ஒருவரும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த மேலும் நால்வருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது அவர்களிடமிருந்து முச்சக்கர வண்டியொன்றையும் வீட்டில் இருந்து ட்ரோனர் கமரா ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இன்ஷாப் அஹமட்டுக்காக துஆ பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி உட்பட ஐவர் கைது.  இன்ஷாப் அஹமட்டுக்காக துஆ  பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி உட்பட ஐவர் கைது. Reviewed by Madawala News on May 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.