நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமும் முன்னெடுக்கப்படும் விசாரணைகளும் இது வரையான அப்டேட்...


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, சந்தேகத்தின் பேரில் இதுவரை
40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என,பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 26 பேர் கைதாகி குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய தெளஹீத் ஜமாஅத் என்ற அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளதாகவும் சீனியர் போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,  நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எடிநியுஸ் வீதி பிரதேசம், பெரியமுல்ல ஆகிய பிரதேசங்களில் வைத்து 6 பாகிஸ்தானியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு- குடியகல்வு சட்டதிட்டங்களை மீறும் வகையில் இலங்கையில் தங்கியிருந்தவர்களே நேற்றைய தினம் (22) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமையவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் 18, 23, 25, 24 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனரென்றும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராய்ட்டர் ஊடகம்  வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சிரிய நாட்டை சேர்ந்த சிலரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமும் முன்னெடுக்கப்படும் விசாரணைகளும் இது வரையான அப்டேட்... நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமும் முன்னெடுக்கப்படும் விசாரணைகளும் இது வரையான அப்டேட்... Reviewed by Madawala News on April 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.