நண்பர்களுடன் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற நிரோஷன் குமார் உயிரிழந்த சோகம்.


தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோனவல பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில்
குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

நேற்று (08) மதியம் 12.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் நீரில் மூழ்கி மீட்கபப்ட்ட  நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் வலவத்த, ரன்தெனிய, தெல்தெனிய பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய நிரோஷன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் தனது நண்பர்கள் 3 பேருடன் குளிக்கச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞனின் சடலம் தெல்தெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை இன்று (09) நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தெல்தெனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுடன் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற நிரோஷன் குமார் உயிரிழந்த சோகம். நண்பர்களுடன் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற  நிரோஷன் குமார் உயிரிழந்த சோகம். Reviewed by Madawala News on April 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.