பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட மொஹமட் முபார் , மொஹமட் ஜபீர் குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நாடு கடத்தப்பட்ட மொஹமட் முபார் மொஹமட் ஜபீர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்று (08) அதிகாலை 5 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மொஹமட் முபார் மொஹமட் ஜபீருடன் மொஹமட் நசீம் மொஹமட் பைசால் என்பரும் வந்தடைந்தார்.
பின்னர் இவர்கள் இருவரையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்றிருந்தனர்.
இருவரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று கைது செய்யப்பட்ட முகம்மத் முபா விடுதலை.
Reviewed by Madawala News
on
April 09, 2019
Rating: