கொழும்பின் புறநகர் பகுதி வத்தளையில் ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் சிறு
பதற்றம் ஏற்பட்டு போலீசார் தலையீட்டில் விசாரனிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
புர்கா அணிந்த ஒருவர் வத்தளை பகுதியில் வீதியில் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த மக்களுக்கு குறித்த நபரின் நடவடிக்கையில், மற்றும் சப்பாத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை சுற்றிவளைத்த மக்கள் சோதனை செய்ய முயற்சித்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டு பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டு விசாரனைகள் தொடர்கின்றன. குறிப்பிட்ட நபரின் அடையாளம் தொடர்பில் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் யோசனையை கொண்டு வந்திருந்தார்.
வத்தளையில் ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவம்.
Reviewed by Madawala News
on
April 24, 2019
Rating: