2015 - 2018 காலப்பகுதியில் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையில் இடம்பெற்ற பல்வேறு வேலை திட்டங்கள் ஊடாக அந்த சபையின் தலைவர் 800 கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ள நிலையில்
அந்த சபையின் அனைத்து ஊழியர் சங்கங்களிடமும் மேற்படி விடயம் தொடர்பில் வினவிய போது குறித்த வகையிலான எந்த ஒரு முறைப்பாட்டையும் அந்த அதிகார சபை எந்தவொரு ஊழியர் சங்கங்களும் செய்யவில்லை என தெரிவித்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தலைவர் எமது செய்திப்பிரிவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
800 கோடி மோசடி ; நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தலைவருக்கு எதிராக முறைப்பாடு
Reviewed by Madawala News
on
April 14, 2019
Rating: