ஶ்ரீ லங்கன் விமான சேவையை நட்டத்தில் இருந்து மீட்க யோசனை வழங்க பிரதமரின் பொருளாதார குழுவினால் நியமிக்கப்பட்ட நைராஸ் நிறுவனத்தின் அறிவுரை காரணமாக 16000 மில்லியன் நட்டமடைந்த ஶ்ரீ லங்கன் விமான சேவை 40000 மில்லியன் நட்டத்தை எட்டியுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நைராஸ் நிறுவனத்திற்கு 300 மில்லியன் கொடுப்பனவு பேசப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்திற்கு 240 மில்லியன் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எஞ்சிய 60 மில்லியன் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள நைராஸ் ஐரோப்பாவில் ஶ்ரீ லங்கணுக்கு எதிராக வழங்கு பதிவு செய்துள்ளதாக வும் ஶ்ரீலங்கன் விமான சேவையை நட்டமடையும் நிறுவனமாக்கி அதனை விடுதலை புலி பினாமி கம்பனி லைக்கா மொபைலுக்கு விற்பனை செய்ய சதி முன்னடுக்கப்படுவதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ; 16000 மில்லியன் இழப்பு 40000 மில்லியன் ஆக அதிகரிகப்பு !
Reviewed by Madawala News
on
April 11, 2019
Rating: