மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று மற்றும் நாளைய
தினத்திலும் மாலை நேரம் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும்.
இடியுடன் கூடிய மழை பொழியும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.
இன்று மற்றும் நாளை இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.
Reviewed by Madawala News
on
March 17, 2019
Rating: