செயற்கை மழை பெய்வதற்கான Rainfall Mission
வேலைத்திட்டம் சென்ற வாரம் நீர்த்தேக்க பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை விமானப்படையின் Y12 விமானத்தை பயன்படுத்தி மேகங்களில் செயற்கை மழைக்கான இரசாயன பதார்த்தம் தூவும் நடவடிக்கையின் பின் அப்பிரதேசங்களில் மழையும் பெய்தது.
இந்நிலையில் தற்போது இந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்போதைய காலநிலையில் செயற்கை மழைக்கான இரசாயன பதார்த்தம் தூவ வானத்தில் மேகங்கள் இன்மையால் இந்த செயற்கை மழை வேலைத்திட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் ஏற்படும் போது மீண்டும் தொடரப்பட உள்ளது.
வானத்தில் போதியளவு மேகங்கள் இன்மையால் செயற்கை மழை வேலைத்திட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.
Reviewed by Madawala News
on
March 26, 2019
Rating: