இலங்கையர்கள் (கண்டி, வவுனியா, கடுகன்னாவ) இந்தியர்கள் இணைந்து நடத்திய தங்க பிஸ்கட் கடத்தல்.


சட்டவிரோதமான முறையில் சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை எடுத்துவர
முற்பட்ட 9 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தங்க பிஸ்கட்கள் அவர்களில் வாயிற்குள் மற்றும் ஆடைகளுக்குள் மறைத்து வைத்து எடுத்து வர முற்பட்ட போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவர்களிடம் இருந்து 3 கோடியே 92 இலட்சம் ரூபா பெறுமதியான 59 தங்க பிஸ்கட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 6 பேரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, கண்டி மற்றும் கடுகன்னாவ பகுதிளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இந்தியர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையர்கள் (கண்டி, வவுனியா, கடுகன்னாவ) இந்தியர்கள் இணைந்து நடத்திய தங்க பிஸ்கட் கடத்தல். இலங்கையர்கள் (கண்டி, வவுனியா, கடுகன்னாவ) இந்தியர்கள் இணைந்து நடத்திய தங்க பிஸ்கட் கடத்தல். Reviewed by Madawala News on March 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.