(Video) இலட்சக்கணக்கில் கொள்ளையடித்து கார் வாங்கிய இளம் கொள்ளையர்கள்... மீதி பணத்துடன் சிக்கினர்.


தெஹிவளை எண்டர்சன் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம்
ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு  வீட்டிலிருந்து 38 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட 19 மற்றும் 20 வயதிற்கிடைப்பட்ட குறித்த இளைஞர்கள் வசமிருந்து 14 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொள்ளையிடப்பட்டுள்ள பணத்தில் கார்  ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார் எனவும் அவரை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான வீடியோ செய்தி.
https://youtu.be/zG6UskZ7wws

(Video) இலட்சக்கணக்கில் கொள்ளையடித்து கார் வாங்கிய இளம் கொள்ளையர்கள்... மீதி பணத்துடன் சிக்கினர். (Video) இலட்சக்கணக்கில் கொள்ளையடித்து கார் வாங்கிய இளம் கொள்ளையர்கள்... மீதி பணத்துடன் சிக்கினர். Reviewed by Madawala News on February 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.