மிகிந்தலையில் இன்று கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு தொல் பொருள் பாதுகாப்பு சட்டத்தில்
வழக்கு பதிவு செய்யவிருப்பதாக தொல் பொருள் திணைக்களத்தில் பணிப்பாளர் மந்தாவல குறிப்பிட்டுள்ளார்.
தொல் பொருள் பாதுகாப்பு சட்டத்திற்கு அமைவாக வழக்கு நிறைவடையும் வரை பிணை கிடைக்காது என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றத்திற்கு ஆகக் குறைந்தது 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் பல்கலைகழக மாணவர்கள் சிலர் தொல்பொருள் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணம் செலுத்தி வழக்கில் இருந்து விடுதலையான நிலையில் இன்று மூதூர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நிட்டம்புவ பகுதியை சேர்ந்த மொழி பயிற்சி நிலையத்தில் பயிழும் மாணவர்கள் மிகிந்தலை ரஜமாகா விகாரை புராண தூபி மீது ஏறி படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளானர்.
வழக்கு முடியும் வரை பிணை இல்லை ; தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்..
Reviewed by Madawala News
on
February 14, 2019
Rating: