யாழ் முஸ்லிம்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத்திட்டம் ..



யாழ் முஸ்லிம்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
முன்னெடுப்பதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பிரதமர் இதை குறிப்பிட்டார்.

அமைச்சர் ரிஷாத் பதியித்தீன் அவர்களின் இந்த யோசனைக்கு தான் விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கி உள்ளதாகவும் அவர் மேலு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த யாழ் முஸ்லிம்களை மீள குடியமர்த்த தேவையான அளவு காணி இன்மையால் இந்த அடுக்கு மாடி வீட்டு திட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ் முஸ்லிம்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத்திட்டம் .. யாழ் முஸ்லிம்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத்திட்டம் .. Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.