பருத்தித்துறை - கற்கோவளத்தில் 22 வயது இளைஞன் அடித்து படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்
எனும் சந்தேகத்தின் பேரில் இருவரை பருத்தித்துறை பொலிஸார், நேற்று (14) இரவு கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், தந்தையும் மகனும் என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தந்தை ஒருவரும் மகனும் கைது.
Reviewed by Madawala News
on
January 15, 2019
Rating: