ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் போலி வைத்தியர் கைது.


நேற்று  நண்பகல் அளவில் வீரகுல பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட
சோதனையின் போது,
சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஸ்யால, வீரகுல, வீரசூரிய கந்த பகுதியில் மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான சந்தேகநபர் ஒருவர்  நடத்திச் சென்ற போலி வைத்திய மத்திய நிலையத்தில் வைத்தியராக அடையாளப்படுத்தி வந்த நபர் ஒருவரிடம், சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பல்வேறு வகையான போதை மாத்திரைகள் மற்றும் மாத்திரை உறைகள் (Capsules) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 சந்தேகநபர் இன்றைய தினம் (16) அத்தனகல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் போலி வைத்தியர் கைது.  ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் போலி வைத்தியர் கைது. Reviewed by Madawala News on January 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.