இளைஞர்கள் மீது வாள் வெட்டு....


யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் இன்று (15) வாள்வெட்டுச்
சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தைப்பொங்கல் தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) நாச்சிமார் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்நிலையில் கோயிலுக்கு அருகிலிருந்த இளைஞர்கள் மீது, வாள்வெட்டுக்குழு  தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளது.

பட்டப்பகலில் நடைபெற்ற இவ்வாள்வெட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அதில் ஒரு இளைஞருடைய வலது கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களாலேயே இவ் வாள் வெட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞர்கள் மீது வாள் வெட்டு.... இளைஞர்கள் மீது வாள் வெட்டு.... Reviewed by Madawala News on January 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.