இந்தியாவில் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகி வருகின்றது.
இதில் பாஜக ஆட்சி செய்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் தொண்டர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். பாஜகவின் இந்த தோல்வி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது வெற்றியால் பாஜக துள்ளிக்குதிப்பதும் இல்லை, தோல்வியால் துவள்வதும் இல்லை என்று தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
5 மாநில பேரவை தேர்தல் தோல்வி வெற்றிகரமான தோல்வி என்று தமிழிசை பேட்டியளித்துள்ளார்.
இந்த மாநிலத் தேர்தல் முடிவுகள், மக்களவைத் தேர்தலை பாதிக்காது. மோடி அலை ஓயவே ஓயாது. அதை ஓய வைக்க பெரிய தலை வேறு எந்தக் கட்சியிலும் இல்லை’ என்றார்.
5 மாநில தேர்தல் தோல்வி ஒரு வெற்றிகரமான தோல்வி: பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
Reviewed by Madawala News
on
December 11, 2018
Rating: