ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாமல் குமாரவையும்
கொலை செய்யவதற்கான சதி முயற்சிகள் குறித்த தனது குற்றச்சாட்டு குறித்து பொலிஸார் உரிய ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை என கொலை சதி முயற்சியை பகிரங்கப்படுத்திய நாமல்குமார தெரிவித்துள்ளார்.
விசாரணையாளர்கள் மிக மோசமான விதத்தில் செயற்படுகின்றனர் என அவர் ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளார்.
பொலிஸாரிற்கு நான் வழங்கவேண்டிய மேலதிக தகவல்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயம் குறித்த விசாரணைகளில் பொலிஸாருக்பு உதவ தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊழலிற்கு எதிரான அமைப்பொன்றை தனதும் நண்பர்களினதும் சொந்த நிதியில் நடத்திவருவதாக தெரிவிக்கும் நாமல்குமார குறித்து ஆரம்பம் முதல் சந்தேகங்கள் காணப்பட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
அவர் தெரிவித்தது அனைத்தும் அர்த்தமற்ற விடயங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளார்
நாமல் குமார நம்பத்தகுந்தவரில்லை என ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை தெரிவித்தவர் நம்பகதன்மையற்றவராக காணப்படலாம் ஆனால் இந்த சதியை அலட்சியம் செய்யமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கொலை சதி குறித்து விசாரணைகளில் பொலிஸார் அலட்சியம்- நாமல்குமார
Reviewed by Madawala News
on
December 14, 2018
Rating: