மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் மீதான இடைக்கால தடை உத்தரவு தொடரும்... அடுத்த வருடம் ஜனவரியில் மீண்டும் விசாரிக்கப்படும்.


மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு
மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு, இன்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கை ஒத்திவைக்காமல் இன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்தும் இருந்தது..

இந்நிலையில் , மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் மீதான இடைக்கால  தடை உத்தரவு தொடரும் என்பதுடன்  இடைக்காலத் தடை உத்தரவை இரத்து செய்யவும்  உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

 அடுத்த வருடம் ஜனவரி 16, 17, 18 இல் மீண்டும் விசாரிக்கப்படும் எனவும் மஹிந்த ராஜபக்ஸவும் எனைய 48 உறுப்பினர்களும் வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை தமது பொறுப்புக்களை வகிப்பதில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும்  மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழுவினர் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்


மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் மீதான இடைக்கால தடை உத்தரவு தொடரும்... அடுத்த வருடம் ஜனவரியில் மீண்டும் விசாரிக்கப்படும். மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் மீதான இடைக்கால  தடை உத்தரவு தொடரும்...   அடுத்த வருடம் ஜனவரியில் மீண்டும் விசாரிக்கப்படும். Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.