ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைக்கு முகைதீன்போடியார் வீதி மக்கள் நன்றி தெரிவிப்பு.



(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று
வாழைச்சேனை ஆகிய இரு பிரதேச சபைகளின் நிருவாக எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி முகைதீன்போடியார் வீதியில் வீதியமைப்பும், வடிகானும் அமைக்கப்பட்டதனால் இவ் வீதியினூடாக திண்மக்கழிவகற்றல் செயற்பாடு முறையாக மேற்கொள்ளப்பட முடியாமல் போனது இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அசெளகரியத்திற்கு மத்தியில் காணப்பட்டார்கள்.
எனவே அவ்வப்போது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் அவர்களின் பணிப்புரைக்கமைய திண்மக்கழிவகற்றும் ஊழியர்கள் இவ்வீதியின் குப்பைகளை அகற்றி வந்துகொண்டிருந்த போதும் இவர்களால் இதனை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியவில்லை, அவர்கள் இப்பணியினை அவர்களது கடமைப் பிரிவுக்குள் இல்லாதபோதும் செயற்படுத்தியமைக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.

அப் பிரதேச மக்கள் அண்மையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு இவ் விடயம் தொடர்பில் நிரந்த தீர்வொன்றினை பெற்றுத்தரும் படி கூறியதக்கமைய அவர் உடன் செயற்படும் வண்ணம் பிரதி வாரம் வியாழக் கிழமைகளில் இவ் வீதிக்கு திண்மக்கழிவகற்றல் நடவடிக்கைக்கான ஒழுங்குகள் செய்யப்படும் என உறுதிமொழி வழங்கினார்.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்  இன்று (13) காலை ஊழியர்களை அவ்வீதிக்கு அனுப்பி திண்மக்கழிவுகளை அகற்றியமைக்காக முகைதீன்போடியார் வாழ் மக்கள் தவிசாளருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் தொடர்ச்சியாக இவ் நடைமுறையினை செயற்படும் வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைக்கு முகைதீன்போடியார் வீதி மக்கள் நன்றி தெரிவிப்பு. ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைக்கு முகைதீன்போடியார் வீதி மக்கள் நன்றி தெரிவிப்பு. Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.