மற்றுமொறு அதிரடி சுற்று நிருபத்தை வெளியிட்டார் மைத்திரி



அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் உள்ளிட்ட சகல
அரச நிறுவனங்களும் தமது நிறுவனம் சார்ந்த வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு தனியார் ஹோட்டல்களை, குறிப்பாக சொகுசு ஹோட்டல்களை பயன்படுத்துதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக  ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தின் ஊடாக அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இன்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பல கேட்போர்கூடங்கள் மற்றும் நிறுவனங்கள் காணப்படும் நிலையில் அவற்றை உபயோகிக்காது அதிகளவான கட்டணங்களை செலுத்தி அரச வைபவங்களையும் நிகழ்ச்சிகளையும் சொகுசு ஹோட்டல்களில் நடாத்துவதன் ஊடாக ஏற்படும் வீண்விரயத்தினை தடுப்பதற்காகவும் அரச செலவினை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்றுமொறு அதிரடி சுற்று நிருபத்தை வெளியிட்டார் மைத்திரி மற்றுமொறு அதிரடி சுற்று நிருபத்தை வெளியிட்டார் மைத்திரி Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.