பாராளுமன்றம் இன்று (12) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றும் பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய பாராளுமன்றத்தை கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தீர்மானத்தில் எவ்வித மாற்றம் இல்லை என்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இன்று 1 மணிக்கு கூடும் பாராளுமன்றம்... மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றும் கலந்து கொள்ளாது.
Reviewed by Madawala News
on
December 12, 2018
Rating: