2015 தேர்தலில் முஸ்லிம்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழப்போகிறீர்கள் என பகிரங்கமாக சொன்னேன். சமூகம் கேட்கவில்லை. இப்போது நெருப்பில் வெம்பிக்கொண்டிருக்கின்றனர்.
உங்களில் பலரின் கருத்துக்கு நான் முரண்படலாம். இது ஒன்றும் எனக்கு புதிதல்ல.
கடந்த காலங்களிலும் இவ்வாறு முரண்பட்ட பலர் என்னை முகநூலில் மிக மோசமாக தாக்கினர். இப்போது அவர்களின் சிலர் நான் எழுதுவது போன்று எழுதுவது எனக்கு இறைவன் தந்த வெற்றியாகும்.
எனது கருத்து நிசயம் உங்களில் பலருக்கு முரண்படும். காரணம் உணர்வை வைத்து சிந்திப்பதில்லை. அவ்வாறு முரண்பட்டால் மௌனமாக இருங்கள் அல்லது உங்கள் கருத்தை நாகரிகமாக முன் வையுங்கள். வார்த்தை எல்லை மீறினால் நான் நீக்க வேண்டி வரும். அதன் பின் ஏன் என்னை நீக்கினீர்கள் என கேட்க வேண்டாம்.
2015 தேர்தலின் போது முழு முஸ்லிம்களும் என் கருத்தை உதாசீணம் செய்து என்னை மிக மோசமாக ஏசினர். சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழப்போகிறீர்கள் என பகிரங்கமாக சொன்னேன். சமூகம் கேட்கவில்லை. இப்போது நெருப்பில் வெம்பிக்கொண்டிருக்கின்றனர்.
அப்போது ஏசிய பலர் என்னைக்கண்டு நான் சொன்னது சரி என ஏற்று மன்னிப்பும் கேட்டனர்.
இப்போது சமகால அரசியலிலும் இவ்வாறே என் கருத்து முரணாக தெரியும். நான் சொல்வது உண்மை என்பது மிக தாமதமாக தெரிய வரும். அப்போது வெட்கிப்பதில் பிரயோஜனம் இல்லை.
நாட்டை யார் ஆண்டாலும் யாரோ ஒரு சிங்களவர்தான் ஆள்வார். அதற்காக நாங்கள் எம்மை நாம் மோசமாக தாக்கி நமது நட்பை சிதைக்க வேண்டாம்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சித்தலைவர்
2015 தேர்தலில் முஸ்லிம்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழப்போகிறீர்கள் என பகிரங்கமாக சொன்னேன். சமூகம் கேட்கவில்லை. இப்போது நெருப்பில் வெம்பிக்கொண்டிருக்கின்றனர்.
Reviewed by Madawala News
on
November 17, 2018
Rating: