அல் அக்ஸா தேசிய பாடசாலை வளாகத்தினுள்ளும் வகுப்பறைக்குள்ளும் மழை நீர் வெள்ளம் . கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கடும் அடை மழை காரணமாக கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலை வளாகத்தினுள்ளும்
வகுப்பறைக்குள்ளும் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்ததால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றார்கள் தெரிவிக்கின்றனர்.

இரு நாட்கள் தொடர்ச்சியான அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 குறித்த பாடசாலையின் வகுப்பறைக்குள் நீர் புகுந்ததால் தளபாடங்கள் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக பெற்றார்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வழமையான நிலைமைக்கு கால நிலை மாற்றம் திரும்புவதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தின் தாழ் நிலப் பகுதிகளை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்க உரிய அரச அதிகாரிகள் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு கல்விக்கான ஆரம்ப கட்ட வேலைகளை செய்யுமாறு பெற்றார்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அல் அக்ஸா தேசிய பாடசாலை வளாகத்தினுள்ளும் வகுப்பறைக்குள்ளும் மழை நீர் வெள்ளம் . கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு.  அல் அக்ஸா தேசிய பாடசாலை வளாகத்தினுள்ளும் வகுப்பறைக்குள்ளும் மழை நீர் வெள்ளம் . கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு. Reviewed by Madawala News on November 07, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.