அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட கமர் நிஸாம்தீன் இன் உண்மை நிலையை விவரிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று கொழும்பில்.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியப் பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டு, பின்பு விடுதலை செய்யப்பட்ட இலங்கை இளைஞரான மொஹமட் கமர் நிஸாம்தீன், கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் குறித்த இளைஞர் முகங்கொடுத்த அவலங்கள் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பில், நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவிக்கவுள்ளார்.
இது தொடர்பிலான உண்மை நிலையை ஊடகங்களுக்குத் தெளிவூட்டும் செய்தியாளர் சந்திப்பொன்று,
காலம் : (இன்று) 7 ஆம் திகதி புதன்கிழமை,
நேரம் : மாலை 3.00 மணிக்கு, இடம் : கொழும்பு - சன்கிரில்லா ஹோட்டலில் (Colombo - Shangrilla Hotel - Lotus Boll Room Yellow)
இடம்பெறவுள்ளது.
இது தொடர்பிலான செய்திகளைச் சேகரிக்க, உங்கள் ஊடக/இணையத்தள நிறுவனத்திலிருந்தும் ஊடகவியலாளர்/படப்பிடிப்பாளர் ஆகியோரை, குறித்த இடத்துக்கு, கட்டாயம் தவறாது அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
நன்றி,
ஐ. ஏ. காதிர் கான்
(ஊடகவியலாளர்)
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட கமர் நிஸாம்தீன் இன் உண்மை நிலையை விவரிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று கொழும்பில்.
Reviewed by Madawala News
on
November 07, 2018
Rating: