Acmc யும் slmcயும் அரசுடன் சேரப்போவதாக செய்திகள் பரவினாலும் சேரமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
எதிரே வரும் பாராளுமன்றத்தில் ஏற்படும் தர்ம சங்கடத்தை தவிர்ப்பதற்காக மக்கா செல்வதுதான் சரி என நினைத்திருக்கலாம்.
மஹிந்தவை பிரதமராக ஜனாதிபதி நியமித்தது ஜனநாயகத்துக்கு முரண் என்ற ஒருமித்த கருத்து இவ்விரு கட்சியினரிடமும் உள்ளது என்பதை வெளிப்படையாக இவர்கள் தெரிவித்து விட்டு மஹிந்தவுடன் இணைந்தால் அது சமூகத்துக்கு அவமானம் தரும் ஒன்றாகும் என்பதிலும் நியாயம் உண்டு.
ஆனாலும் ரணில் மீண்டும் பிரதமர் ஆவாரா இல்லையா என்பதற்கப்பால் மீண்டும் பிரதமர் ஆனால்...
1. கல்முனை தேர்தல் மாவட்டத்தை பிரகடனப்படுத்தல்
2. முஸ்லிம்களின் காணிகளை விடுவித்தல்
3. அத்து மீறிய சிலைகளை அகற்றல்
4. கல்முனையை 1987ம் ஆண்டு இருந்தது போன்ற எல்லைகளாய் பிரித்தல்
5. புலிகளாலும் புலி ஆதரவாளர்களாலும் பிடிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு முஸ்லிம்களின் காணிகளை விடுவித்தல்
6. ஹஜ் செல்வோர் 25000 ரூபா பதிவுப்பணமாக செலுத்தி வட்டிக்கு துணை போவதை நிறுத்துதல்
7. ஹஜ்ஜுக்கு போவோருக்கு அனைத்து நாடுகளுக்கான பாஸ்போட் வேண்டும் என்ற சட்டத்தை நீக்குதல்
8. வெளிநாட்டு வேலைவாய்ப்பில் பிரதேச செயலாளர், அனுமதி வேண்டும் போன்ற தேவையற்ற கெடுபிடிகளை குறைத்தல்
9. மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களாக முஸ்லிம்களையே நியமிக்க வேண்டும் என்பதை ஏற்றல்
10. ஜி சி ஈ சாதாரண தர பரீட்சைக்கு மீண்டும் அரபு பாடத்தை முஸ்லிம்களுக்கு கட்டாய விருப்ப பாடமாக ஆக்குதல்
11. வட மாகாண முஸ்லிம்களின் காணிகளை மீண்டும் அவர்களிடம் கையளித்தல்
போன்றவற்றுக்காவது திரு. ரணில் மூலம் எழுத்து மூல ஒப்புதலை இப்போதாவது அலறி மாளிகைக்குள் வேலைவெட்டியின்றி தவம் இருக்கும் இப்போதாவது பெற்றுக்கொண்டால் நிச்சயம் சமூகம் நன்றியுடன் இருக்கும்.
முடியாது என்பதே என் கணிப்பு. முடியும் என்று செய்து காட்டினால் அது சாதனைதான்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சித்தலைவர்
ரணிலுக்கு ஆதரவளிக்க, ACMC - SLMC தலைவர்கள் குறைந்தபட்சம் இந்த கோரிக்கைகளையாவது நிறைவேற்ற வேண்டும்.
Reviewed by Madawala News
on
November 07, 2018
Rating: