- PMMA காதர்-
பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலய மாணவி எஸ்.ஏ. செரீன் ஸஹ்றா
தேசிய மட்ட ஆங்கில தின போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.தேசிய மட்டத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட ஆங்கில தின கையெழுத்துப் பிரதி பண்னுதல் போட்டியில் பங்குபற்றியே மாணவி எஸ்.ஏ. செரீன் ஸஹ்றா 2ஆம் இடத்தினை பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இம் மாணவிக்கு கல்முனை வலயக் கல்வி ஆலுவலகத்தின் ஆங்கிலப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலீல் சான்றிதழ் வழங்கி கௌரவித்த நிகழ்வு அதிபர் எம்.எம்.எம்.நியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கௌரவிப்பு நிகழ்வில் கற்பித்த ஆசிரியர்களான திருமதி எஸ்.எம்.ஜெஸீர்,திருமதி எம்.ஐ.பஹ்மிதா,திருமதி. எப்.ஐ.அப்துல் பஸாஹிர்,திருமதி. எம்.எம்.சுபுஹானி, திருமதி.எம்.எஸ்.ஜனூபா,ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆங்கில தின போட்டியில் எஸ்.ஏ. செரீன் ஸஹ்றா தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்.
Reviewed by Madawala News
on
November 07, 2018
Rating: