அதாஉல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸில் இருந்து அக்கட்சியின் முன்னாள் கிழக்கு
மாகாண கொள்கை பரப்பு செயலாளர் அஹமட் புர்க்கான் அவர்கள் கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து தாமாக விலகிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
மாகாண கொள்கை பரப்பு செயலாளர் அஹமட் புர்க்கான் அவர்கள் கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து தாமாக விலகிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகள் காரணமாக தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்களிடம் பல தடவைகள் பிரச்சினைகளை எடுத்துக் கூறியும் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாததை தொடர்ந்து அதிர்ப்தியுற்ற நிலையில் கட்சியை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2018.10.10 அதாவது புதன்கிழமை தமது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவருக்கு பதிவுத் தபால் மூலமாக அஹமட் புர்க்கான் அனுப்பிவைத்துள்ளார்.
தேசிய காங்கிரஸில் இருந்து அஹமட் புர்க்கான் இராஜினாமா!
Reviewed by Madawala News
on
October 12, 2018
Rating: