5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முயற்சித்தது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி .
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் இலங்கை
கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இங்கிலாந்து அணியுடன் இடம்பெறுகின்ற போட்டித் தொடரிற்கான ஔிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முற்பட்டமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முயற்சித்தது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி .
Reviewed by Madawala News
on
October 22, 2018
Rating: