இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுகம பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுகம, எலேதுவத்த பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது
யடதொல பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டுடன் ஒருவர் கைது.
Reviewed by Madawala News
on
October 14, 2018
Rating: