வாகன இறக்குமதியை கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையை அரசாங்கம் நேற்று
அறிவித்தது.
வாகன இறக்குமதிக்காக வணிக வங்கிகளில் கடன் கடிதங்களை திறக்கும் போது நூற்றுக்கு நூறு வீத உயர் பணவைப்பை கட்டாயமாக பேண வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை தவிர்த்து மற்றைய அனைத்து வாகனங்களுக்காக இது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.
அண்மை காலமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் தேவையற்ற வாகன இறக்குமதிகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
வாகன இறக்குமதியை கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையை அரசாங்கம் அறிவித்தது.
Reviewed by Madawala News
on
September 20, 2018
Rating: