ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி வலுவான நிலையில் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளமை இதற்கான காரணமாகும்.
ஏனைய நாடுகளின் நாணங்களுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதி வலுவான நிலையில் உள்ளது. இது இலங்கைக்கு மாத்திரம் தாக்கம் செலுத்தும் நெருக்கடியல்ல. சிலருக்கு இது பாதகமாக இருந்தாலும், ஏற்றுமதித்துறையினருக்கு இது சாதகமானதாகுமென அவர் கூறினார்.
அரசாங்கம் பதவியேற்ற காலப்பகுதியில் காணப்பட்டதைவிட துண்டு விழும் தொகை தற்சமயம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை நாணயத்தின் பெறுமதி வலுவான நிலையில் உள்ளது..
Reviewed by Madawala News
on
September 20, 2018
Rating: