திகன கலவரத்தின் பின்னனியில் DIG நாலக மற்றும் நாமல் குமார ; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ..
திகன கலவரத்தின் பின்னனியில் தீவிரவாத தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் DIG நாலக சில்வா மற்றும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ள நாமல் குமார இருந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்களே அபி அமைப்பினரும் திகன கலவரத்தில் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
நாலக குமார என்பவரே திகன பிரதேசத்தில் வன்முறைகளை தூண்டிவிட்டு வாலிபர்களை அதில் சிக்கவைத்ததாகவும் பின்னர் நாலக சில்வாவுக்கு தகவல் வழங்கி சிங்கள வாலிபர்களை கைது செய்து அவர்களை இதில் மாட்டிவிட்டதாகவும் சிங்களே அபி அமைப்பினரும் திகன கலவரத்தில் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர்களின் குடும்ப உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
திகன கலவரத்தின் பின்னனியில் DIG நாலக மற்றும் நாமல் குமார ; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ..
Reviewed by Madawala News
on
September 20, 2018
Rating: