பிரம்மாண்ட உருவத்தை உடைய மாடு ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காட்சிப்படுத்தப்பட
உள்ளது.
இந்த மாட்டை காட்சிப்படுத்திய பின்னர் அறுக்கப்பட்டு 1000 ரூபா பங்கு என விற்பனை செய்யப்பட உள்ளதாக அதன் உரிமையாளர் மட்டன் சனூன்(0773040885) குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் கூட குறித்த வர்த்தகர் இவ்வாறான மாடு ஒன்றை காட்சிப்படுத்தி அறுத்து பங்கு போடுவதாக விளம்பர படுத்திய நிலையில் சிவசேனா அமைப்பு சைவ மகா சபை யாழ்.வர்த்தக சங்கம் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக குறித்த மாடு உயிருடன் மீட்கப்பட்டு பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டு கீரிமலை கோயில் ஒன்றிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இது இவ்வாறு இரந்த போதிலும் குறித்த மாட்டை மூன்றைரை வயது முதல் வளர்த்து வந்தவர் தனது வீட்டின் பொருளாதார நிலைமை காரணமாகவே மாட்டினை விற்பனை செய்ததாகவும் மாட்டினை வாங்கி சென்றவர் ஒரு தமிழர் எனவும் அதனை தான் வளர்க்க போறேன் என்று கூறியே மாட்டை வாங்கி சென்றார் எனவும் அதனை இறைச்சிக்காக விற்பார்கள் என நாம் அறிந்திருந்திருந்தால் அதனை அவரிடம் விற்று இருக்கமாட்டோம் என தற்போது கூறியுள்ளனர்.
பிரம்மாண்ட உருவத்தை உடைய மாடு.. பங்கு 1000 ரூபா. மட்டன் சனூனின் வித்தியாச அறிவிப்பு.
Reviewed by Madawala News
on
September 15, 2018
Rating: