(எச்.எம்.எம்.பர்ஸான்)
கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின்
ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா இன்று 21ம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 9.30 மணி வரை மீராவோடை எம்.பீ.ஸீ.எஸ். வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.
எனவே இவ் இஜ்திமாவில் அனைவரும் அவசியம் கலந்து கொண்டு இஸ்லாமிய அறிவையும் ஈமானிய உணர்வையும் அதிகரித்துக் கொள்ள வருகை தருமாறு றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா அனைவரையும் அன்பாக கேட்டுக் கொள்கின்றது.
இன்று (வெள்ளி) மீராவோடை தாருஸ்ஸலாமில் இஜ்திமா.
Reviewed by Madawala News
on
September 21, 2018
Rating: