விடுதலை புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள் வசம் உள்ளது..



விடுதலை புலிகளின் ஆயுதங்கள் இன்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம்
இருப்பதாக புனர்வாழ்வு அளிக்கப்பட தமிழ்  விடுதலை புலிகள் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இன்று குறித்த கட்சியை சேர்ந்த புனர்வாழ்வு அளிக்கப்பட   விடுதலை புலி உறுப்பினர்கள் நடத்திய ஊடக மாநாட்டில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட குறித்த உறுப்பினரினர்கள்..

கருணா அம்மான் பிரிந்து சென்ற பின்னர் விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் வெளிநாடு சென்றனர். அவர்களிடம் இருந்த  5000 கும் அதிகமான ஆயுதங்கள் தற்போது எங்கே? அவை அனைத்தும் முஸ்லிம் அரசியல் வாதிகள் வசமே உள்ளது. அந்த தைரியத்தில் தான் ஹிஸ்புல்லாஹ் பரிதியின் போன்றவர்கள் ரத்த ஆடும் என சவால் விடுகின்றனர்.

மேலும் கோவில்களை உடைத்து பள்ளி அமைப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அரசு ஏன் மௌனமாக உள்ளது.காத்தாங்குடி , முதூர் மற்றும் கின்னியா ஆகிய பகுதிகளில் ஆயுதம் இருபதற்கான  தகவல்கள் எம்மிடம் உள்ளது.இது தமிழ் மக்களுக்கும் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் ஆபத்தானது.

எந்த ஒரு அமைச்சருக்கும் மீண்டும் விடுதலை புலிகள் வரவேண்டும் என கூறமுடியும் ஆனால் மீண்டும் விடுதலை புலிகள் உருவாகாது என்பது எமக்கு மாத்திரமே தெரியும்.நாளை இந்த நாட்டில் யுத்தம் ஒன்று உருவானால் நாம் நாட்டிற்காக போராடுவோம் என குறிப்பிட்டனர்.
விடுதலை புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள் வசம் உள்ளது.. விடுதலை புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள் வசம் உள்ளது.. Reviewed by Madawala News on August 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.