வீடமைப்பு பொதுவசதிகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முதலீடுகள் இரண்டு மடங்கினால்
அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மொனறாகலை மாவட்டத்தில் தெவிபுதகம மாதிரிக் கிராமம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மக்கள் பாவனைக்காக நேற்று கையளிக்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.
இந்து சமுத்திரத்தின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் கூறினார்.
2025ஆம் ஆண்டளவில் புதிதாக 17 ஆயிரத்து 500 உதாகம்மான கிராமங்களை ஏற்;படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்று நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தெனிபுதகம உதாகம்மான கிராமம் 93 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 52 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்து சமுத்திரத்தின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பது அரசாங்கத்தின் இலக்காகும்
Reviewed by Madawala News
on
August 18, 2018
Rating: