தேரர் ஒருவரால் கழுத்து நெரித்து கொலையான போலீஸ்காரருக்கு பதவி உயர்வு.


இரத்தினபுரி, கல்ஹெந்த பிரதேசத்தின் விகாரை ஒன்றில் வைத்து தேரர் ஒருவரினால் கொலை செய்யப்பட்ட
காவல்துறை அலுவலர் பதவி உயர்வு செய்யப்படவுள்ளார்.

அவரை உப காவல்துறை பரிசோதகராக பதவி உயர்த்துமாறு, காவல்துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.



குறித்த காவல்துறை அலுவலர், பிடியாணை பிறப்பிக்கபட்டிருந்த தேரர் ஒருவரை கைது செய்ய சென்ற வேளை, கொலை செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்தது.

இதன்போது தேரர், காவல்துறை அலுவலரை கழுத்து நெரித்து கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட தேரரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேரர் ஒருவரால் கழுத்து நெரித்து கொலையான போலீஸ்காரருக்கு பதவி உயர்வு. தேரர் ஒருவரால் கழுத்து நெரித்து கொலையான போலீஸ்காரருக்கு பதவி உயர்வு. Reviewed by Madawala News on July 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.