புகையிரத வண்டியில் பாய்ந்து பெண்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள
சம்பவம் கம்பஹா தரலுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரவு 8.45 அளவில் இச்சம்பம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்தில் மினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய பெண் ஒருவரும் நீர் கொழும்பைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவருமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டவர்களில் பெண் ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஒரே தரத்தினையுடைய இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் தற்கொலை செய்துகொண்ட இரு பெண்களும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் எனவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஓரின காதலும் அதற்கான எதிர்ப்புமே தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என சந்தேகம் ஏற்படுள்ளது.
யுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைவரும் தங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் எனவும் வீட்டுக்கும் சமூகத்துக்கும் முகம் கொடுக்க தங்களால் முடியாது எனவும் குறிப்பிட்ட கடித்ததில் எழுதபட்டுள்ளது.
தற்கொலையில் முடிந்த "கூடா தொடர்பு".. இளம் யுவதிகள் இருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம்.
Reviewed by Madawala News
on
July 12, 2018
Rating: