போலீசாரை கண்டதும் கையில் இருந்த கஞ்சா கிலோ பொதியை வீசி விட்டு தப்பியோட்டம்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை மட்கோ பகுதியில் ஒருவர்  பொலிஸார் குழுவினரை கண்டு தன்கையில்
இருந்த கேரளா கஞ்சா பொதியை வீசி விட்டு நேற்று  தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் குழுவினர் ஒருவர் தெரிவித்தனர் .

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது மட்கோ பகுதிக்கு வேறு வேலை நிமித்தம் திடீர் சோதனைக்காக சென்றவேலையில் வீதியின் அருகே பொதி ஒன்றை வைத்திருந்த நபரொருவர் தங்களது பொலிஸார் குழுவினரை கண்டவுடன் பொதியை வீசி விட்டு தப்பியோடியுள்ளார்.

 அதனை மீட்டு பரிசோதித்த போது கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் சுமார் ஒரு கிலோ 152 கிராம் எடை கொண்ட பொதியாக காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




இந் நபரை தாங்கள் முன்னர் கேரளா கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் இதற்கு முன்னர் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.குறித்த கேரளா கஞ்சாவை திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தப்பியோடிய நபரான ஆண்டாங்குளம்,திருகோணமலை எனும் முகவரியை சேர்ந்த விக்ரமகே சந்தன குலதுங்க வயது(40) என்பவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
போலீசாரை கண்டதும் கையில் இருந்த கஞ்சா கிலோ பொதியை வீசி விட்டு தப்பியோட்டம். போலீசாரை கண்டதும் கையில் இருந்த கஞ்சா கிலோ  பொதியை வீசி விட்டு தப்பியோட்டம். Reviewed by Madawala News on July 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.