நீண்ட நாள் பகை... ஆறு பிள்ளைகளின் தந்தையொருவர் வெட்டிக்கொலை. #காத்தான்குடி பொலிஸார் விசாரணை.


காத்தான்குடி - ஆரையம்பதி, மாவிலங்குதுறையில் ஆறு பிள்ளைகளின் தந்தையொருவர் வெட்டிக்கொலை
செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை மாவிலங்குதுறையில் உள்ள வீட்டுத்திட்ட பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அயல் வீட்டுக்காரர் மற்றும் அவருக்கு உதவிய நான்கு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சம்பவத்தில் மா.லெட்சுமணன் என்பவரே உயிரிழந்துள்ளதுடன், அயல் வீட்டுக்காரருடனான நீண்ட நாள் பகையே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தென்னை மரம் சீவும் கத்தியால் லெட்சுமணனின் தலைப்பகுதியில் சரமாரியான வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியில் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நாள் பகை... ஆறு பிள்ளைகளின் தந்தையொருவர் வெட்டிக்கொலை. #காத்தான்குடி பொலிஸார் விசாரணை. நீண்ட நாள் பகை... ஆறு பிள்ளைகளின் தந்தையொருவர் வெட்டிக்கொலை. #காத்தான்குடி பொலிஸார் விசாரணை. Reviewed by Madawala News on June 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.