பிக்குமாருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் வேகத்தில் ஏனைய நபர்களின் வழக்குகளையும் விசாரிக்குமாறு
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் 40 ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் இன்று நடைபெற்ற நடமாடும் சேவையின் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அனைவரும் சட்டம் சமமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தில் நடந்த கொலை, கொள்ளைகள், நிதி மோசடிகள், ஊழல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
பிக்குகளின் வழக்குகளை நடத்தும் வேகத்தில் இந்த வழக்குகளை நடத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
பிக்குகளின் வழக்குகளை நடத்தும் வேகத்தில் மற்ற வழக்குகளையும் வேகமாக நடாத்த வேண்டும்.
Reviewed by Madawala News
on
June 18, 2018
Rating: