குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறைச்சாலை
சட்டங்களின்படி காவி உடையை அணிய அனுமதிக்க முடியாது என தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர், துசார உபுல்தெனிய சிறைக் கைதிகளின் சீருடையையே தண்டனை அனுபவிக்கும் கைதிகள் அணிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றத்துக்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், ஞானசார தேரரின் காவி உடை நீக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கும்போதே சிறைச்சாலைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
ஞானசார தேரர் சிறைக் கைதிகளின் சீருடையையே அணிவார்.. காவி உடையை அணிய அனுமதிக்க மாட்டோம்.
Reviewed by Madawala News
on
June 19, 2018
Rating: