பௌத்த மத குரு ஒருவரை பெண் ஒருவர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று தனமல்வில
- செவனகலை பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் நீண்டகாலமாக ஒருவர் கசிப்பு தயாரிப்பில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் அவரை பல தடவைகள் எச்சரித்துள்ள போதிலும் குறித்த நபர் கசிப்பு வியாபாரத்தை நிறுத்தவில்லை.
இந்நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள வலவேகம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் குறித்த நபரை எச்சரித்துள்ளார்.
எனினும் கசிப்பு வியாபாரம் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், விகாரதிபதி காவல் துறையினருக்கு இரகசியமாக தகவல் வழங்கியுள்ளார்.
காவல் துறையினரிடமும் சிக்காது பல நாட்கள் குறித்த நபர் தப்பித்து வந்த நிலையில், காவல் துறையினர் குறித்த நபரின் வீட்டினை சுற்றி வளைத்தனர்.
இதன்போது குறித்த நபர் கசிப்பு தயாரிப்பில் ஈடுபடப்டடிருந்தார் என்பதோடு, காவல் துறையினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் தயாரித்து வைத்திருந்த 2000 மில்லிலீற்றர் கசிப்பு மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
விகாராதிபதியின் காட்டிக்கொடுப்பினை சகித்துக்கொள்ள முடியாத கசிப்பு விற்பனையாளரின் மனைவி, மறுதினம் வழிபாட்டிற்கு செல்வது போன்று விகாரைக்கு சென்று விகாராதிபதியை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார்.
இதன்போது அருகிலிருந்தவர்களால் விகாராதிபதி காப்பாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சமூகத்திற்கு நலவு செய்த பெளத்த தேரர்... கத்தியால் குத்த முயற்சித்த பெண்.
Reviewed by Madawala News
on
June 25, 2018
Rating: