ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடி என்பன முச்சக்கர
வண்டி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும், பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் இருந்து தப்பியோடிய செல்வலிங்கம் என்ற முன்னாள் போராளி, சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது
Reviewed by Madawala News
on
June 25, 2018
Rating: