ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுப்படவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் நட்பு இயக்கங்கள் அறிவித்துள்ளன.
எதிர்வரும் 18 ம் திகதி இடம்பெறும் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் ஆயிரம் பிக்குகள் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படும் அதேவேளை கொழும்பு புறக்கோட்டை போகாஹா பகுதியில் பிக்குகள் பங்களிப்புடன் விஷேட மத அனுஷ்டானங்களுடன் இந்த சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்படவுள்ளது.
பொதுபல சேனாவுடன் அதன் நட்பு பௌத்த அமைப்புகள் இதில் கைகோர்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம்
Reviewed by Madawala News
on
June 16, 2018
Rating: