நுவரெலியாவில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ராகலை, சமகிபுர பிரதேசத்தில் பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவர் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 2.30 மணியளவில் வீதி அருகில் இருந்த ஏரி நீரில் சிக்கியமையினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உடபுஸ்ஸலாவ பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுடைய சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தமிழ் பாடசாலை ஒன்றில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
பாடசாலை நிறைவடைந்து 5 மாணவர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ராகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை மலையகத்தில் பெய்த அடைமழையை தொடர்ந்து இந்த மாணவி பயணிக்கும் வீதியில் நீரோட்டம் நிறைந்து காணப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் வழமைக்கு மாறாக நீரோட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தப்ப பகுதி மக்கள் தெரிவித்துள்னர். இதன் காரணமாக மாணவி உயிர் பறி போயுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழந்த சோகம். #மலைநாடு.
Reviewed by Madawala News
on
May 25, 2018
Rating: